ஏமாற்றிய காதலன் வீட்டின் முன் காதலி செய்த செயல்..!
நெல்லையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டதாக இளம் பெண் காதலன் வீட்டிற்கு முன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராணி பெனிசிலேட். எம்எஸ்சி பட்டதாரியான இவர் தனியார் நிறுவன மேனேஜராக பணியாற்றி வருகிறார்.
இவரும் ராஜா என்பவரும் காதலித்து வந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னை காதலித்து வந்ததாகவும் திருமணம் செய்வதாக கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் ராணி காதலன் வீட்டிற்கு முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
காவலர்கள் வந்து போலீசார் ராணி மற்றும் ராஜாவின் பெற்றோர்களை சமாதானம் செய்தனர். ராஜா தன்னுடன் சேர்ந்து வாழும்வரை தர்ணாவில் ஈடுபடுவேன் என ராணி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.





