ஓடும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் இருந்து கழன்ற பெட்டிகள்..!
கேரளாவில் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினியிலிருந்து பெட்டிகள் தனியாக கழன்று சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து சூலூர் நோக்கி எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது எதிர்பாராத விதமாக பலத்த சப்தத்துடன் ரயிலில் இருந்து பெட்டிகள் தனியாக கழன்றன. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்து ரயிலில் இருந்து பதறி அடித்து வெளியேறினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள் தனியாக பிரிந்த பெட்டிகளை நீக்கும் பணியில் ஈடுபட்டனர்.





