துணியை காய போட சென்ற கணவர்.. தாக்கிய மின்சாரம்..காப்பாற்ற முயன்ற மனைவிக்கு துயரம்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல் சிறுவள்ளூரில் வீட்டில் போர்டிகோவில் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியில் துணி உலர்த்திய நிதி நிறுவன ஊழியரும் அவரைக் காப்பாற்ற முயன்ற மனைவியும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
போர்வெல் இயக்குவதற்காக அமைக்கப்பட்டிருந்தால் இன்சுலேஷன் இல்லாத மின் வயரையும் துணி காயப்போட பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பியும் ஒன்றுடன் ஒன்று உரசியதில் மின்சாரம் பாய்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.





