குர்குரே வாங்கி வராத கணவன்.. வீட்டை விட்டு வெளியேறிய மனைவி..!
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குர்குரே வாங்கி தர வேண்டும் என்று தனது கணவரிடம் வலியுறுத்தியுள்ளார். அதன்படி தினமும் மனைவிக்காக குர்குரே வாங்கிக் கொண்டிருந்த கணவர் ஒருநாள் மனைவியுடன் நடந்த வாக்குவாதத்தில் குர்குரே வாங்கி தர மறந்துவிட்டார்.
இதனால் கணவனை மனைவி பிரிய முடிவு எடுத்து வீட்டை விட்டு வெளியேறிய அந்த பெண் அவருடைய பெற்றோர் வீட்டில் தங்கி உள்ளார். பின்னர் விவாகரத்து கோரியதைடுத்து அவர்கள் இருவரையும் காவலர்கள் தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால் குடும்ப நல ஆலோசனைக்கு பிறகு இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் ஆலோசனை அளிக்கப்பட்டு பின்னர் சில நாட்களுக்கு பிறகு இருவரும் மீண்டும் ஆலோசனைக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





