மூளைக்குள் இறங்கிய துப்பாக்கி குண்டு.. 4 நாட்களுக்குப் பிறகு நடந்த அதிசயம்..!
பிரேசிலில் மூளையை துளைத்த துப்பாக்கி குண்டுடன் நான்கு நாட்கள் போராடிய இளைஞர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர் ரியோ டி ஜெனரவில் உள்ள கடற்கரையில் தனது நண்பர்களுடன் பொழுதை கழித்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அவரின் தலையில் ஏதோ மோதியுள்ளது. அதனை சாதாரண கல் தான் என நினைத்தவர் நண்பர்களுடன் சேர்ந்து நீச்சல் அடித்து மகிழ்ந்துள்ளார்.
பின்னர் நான்கு நாட்களாக அதிக தலைவலியால் துடித்துப் போன இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஸ்கேன் செய்தவருத்தவர்கள் மூளைக்குள் ஏதோ ஒன்று இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் மூளைக்குள் இருந்த ஒன்பது எம்எம் வகை துப்பாக்கி தோட்டாவை அகற்றியுள்ளனர்.





