ராமருக்கு பிடித்த பீப் பிரியாணி ரெடி.. என பதிவிட்ட திமுக நிர்வாகி சர்ச்சை பதிவு..!
ராமர் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்டதாக பொள்ளாச்சி திமுக பிரமுகரின் வீட்டை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் தொகுதியை சேர்ந்த திமுக மாநில நிர்வாகி தென்றல் சிவராஜ் மற்றும் அவருடைய மகன் மணிமாறன் அயோத்தி ராமர் குறித்து சச்சின் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் இதனை கண்டித்து பாஜகவினர் செல்வராஜ் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது கைகலப்பு ஏற்பட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.






