விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவருக்கு டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை..!
நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்தில் படுகாயம் அடைந்த மூன்று பேருக்கு அவசர சிகிச்சை பிரிவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பாபா பக்ருதீன் மற்றும் அவரது தாயார் சென்று இருசக்கர வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்து ஐந்து பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.





