திருமண நிகழ்வில் தேடப்பட்டு வந்த லலித் மோடி..!
மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞரான ஹரிஷ் சால்வேயின் திருமண நிகழ்வில் லலித் மோடி பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹரிஷ் சால்வே 1999 முதல் 2002 ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் மறைமுக தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய ஹரிஷ் சால்வே ஏற்கனவே இரண்டு பேரையும் விவாகரத்து செய்திருந்த நிலையில் கடந்த 3ம் தேதி பிரிட்டனை சேர்ந்த மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
லண்டனில் நடைபெற்ற அந்த திருமண நிகழ்வில் பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல தொழிலதிபர் லலித் மோடி பங்கேற்றது சர்ச்சையாகியுள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான முன்னாள் குடியரசுத் தலைவர் ராமநாதன் கோவில் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் ஹரிஷ் சால்வே இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.





