சாலையில் ஓடிய குழந்தையை விரட்டிப் பிடிக்க முயன்ற பெண்.. மனதை அதிர வைத்த சிசிடிவி..!
கேரள மாநிலம் வய நாட்டில் சாலையின் குறுக்கே ஓடிய குழந்தை மீதும், அதனை மீட்க சென்ற பெண் மீதும் பயணிகளுடன் வந்த ஆட்டோ வேகமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.






