வங்கி அதிகாரிகள் மீது கோபம்.. ஏடிஎம்மில் வெடிகுண்டை வீசிய நபர்..!
வங்கி அதிகாரிகள் மீதுள்ள கோபத்தால் நாட்டு வெடிகுண்டை வீசி சென்ற இளைஞரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தங்களுடைய வங்கியில் அந்த நபருக்கும் வங்கி அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த நபர் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வங்கி அருகே செயல்படும் ஏடிஎம்மில் வீசி சென்றுள்ளார் பயங்கர சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.






