எஸ்கலேட்டரில் ஏற்பட்ட பேராபத்தால் அடுத்தடுத்து சரிந்து விழுந்த மக்கள்..!
தென்கொரியாவில் எஸ்கலேட்டர் பின்னோக்கி நகர்ந்ததால் அதில் பயணித்த 14 பேர் காயம் அடைந்தனர். தென்கொரியாவில் அங்குள்ள நகரும் படிக்கட்டை பயன்படுத்தி சிலர் மேலே ஏற முயன்ற பொழுது எஸ்கலேட்டர் எதிர்பாராத விதமாக பின்னோக்கி நகர்ந்தது.
இதனால் அதில் சென்றவர்கள் நிலை தடுமாறி ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மூன்று பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.





