14 வயதில் கருத்தரிக்கலாம் – பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதிபதி தீர்ப்பு..!
14, 15 வயதில் சிறுமிகள் திருமணம் செய்து கொள்வதும் கருத்தரிப்பதும் சாதாரணமானது தான் என குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் வன்கொடுமையால் கருவுற்ற மகளின் கருவை கலைக்க அனுமதி கோரி அவரது தந்தை குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் விசாரணைக்கு வந்தபொழுது 14. 15 வயதில் சிறுமிகள் திருமணம் செய்து கொள்வதும், கருத்தரிப்பதும் 17 வயதில் குழந்தை பெற்றுக் கொள்வதும் சாதாரணமானது தான் என தெரிவித்தார்.





