கட்சி கொடி கம்பத்தை நடும் பொழுது மின்சாரம் தாக்கி பாமக பிரமுகர் உயிரிழப்பு..!
கடலூர் அடுத்த கேஎன் பேட்டையில் புதுப்பிக்கப்பட்ட கொடிக்கம்பத்தை மீண்டும் மாற்றுவதற்கு முயன்ற பொழுது மேலே சென்ற மின்வயரில் பட்டு அதில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் பாமக நிர்வாகி சந்தோஷ்குமார் உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி பலியான நிர்வாகியின் குடும்பத்தினருக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.





