திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் அமைப்பு..!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாக அதிகரித்து வரும் நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
42 படுக்கை வசதிகள் கொண்ட இந்த கொரோனா சிகிச்சை மையத்தை ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவர்கள், செவிலியர் தயார் நிலையில் இருப்பதாகவும் திருச்சி மாநகராட்சியில் 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுவதாகவும் கூறியுள்ளனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் ஏழு கருவுற்ற பெண்கள் உட்பட ஒன்பது பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.





