காற்றின் வேகத்தால் 80 அடி உயரத் தெப்பம் முறிந்து விழுந்தது..!
மாசி மக திருவிழாவை முன்னிட்டு கடலூர் ஆற்றங்கரை வீதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெப்பம் முறிந்து விழுந்தது. 80 அடி உயரத்தில் தயார் செய்யப்பட்ட தெப்பம் காற்றின் வேகத்தால் திடீரென முறிந்து விழுந்தது.
இதன் பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






