பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய தலைவர் ராஜினாமா..!
பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய தலைவர் அஜித் மோகன் தனது பதவியை ராஜினாமா செய்தார். சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமான facebook ஐ மெட்டா என பெயர் மாற்றுவதாக அதன் நிறுவனர் அறிவித்திருந்தார்.
பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய தலைவராக 2018 ஆம் ஆண்டு முதல் இவர் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அந்த பொறுப்பில் இருந்து அஜித் மோகன் தற்போது ராஜினாமா செய்தார்.






