ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்ததால் சிகிச்சை பெற்று வந்த ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்தான். ஆசிட் குளிர்பானத்தை குடித்ததால் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தான்.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது அங்குள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.





