பறக்கும் கார் துபாயில் அறிமுகம்..!
இரண்டு பேர் அமர்ந்து பயணிக்கும் பறக்கும் கார் துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாகன தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த மின்சார வாகனத்திற்கு x2 என பெயரிடப்பட்டுள்ளது.
இரண்டு இருக்கைகள் கொண்ட எலக்ட்ரிக் கார் செங்குத்தாக மேலெழும்பி தரையிறங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 90 நிமிடங்கள் நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.






