ஓசியில் செல்லமாட்டேன் என்று சண்டையிட்ட மூதாட்டி மீது வழக்குப்பதிவு..!
அரசு பேருந்தில் ஓசியில் செல்லமாட்டேன் என்று பேருந்து நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓரிரு நாட்களுக்கு கோவை மதுக்கரை பகுதியில் சென்ற அரசு பேருந்தில் ஏறி ஓரிருவர் ஓசியில் பயணிக்க மாட்டேன் என நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி காட்டு தீ போல் பரவியது.
இது அதிமுகவினரின் தூண்டுதலின் பேரில் நடத்தப்பட்டதாக ஆளும் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.





