நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வியுற்றதால் மாணவி தற்கொலை..!
திருவள்ளூர் அருகே நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வியுற்றதால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி கடந்த 17ஆம் தேதி நீட் தேர்வில் பங்கேற்ற இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து குறைவான மதிப்பெண் பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனையில் இருந்த மாணவி ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக மாணவியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.





