மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!
மேற்கு வங்கத்தில் பணிபுரியும் மத்திய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் என மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவில் உரையாற்றிய அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
2024இல் பாஜகவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிவோம் என ஆவேசமாக கூறினார். மேற்குவங்க அதிகாரிகளை டெல்லிக்கு அழைத்தால் மாநிலத்தில் பணிபுரியும் மத்திய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.





