நயாகரா நீர்வீழ்ச்சியின் உச்சியில் காருடன் சிக்கிய 60 வயது பெண்..!
அமெரிக்காவின் நயகரா நீர் வீழ்ச்சியில் உச்சியில் காருடன் மூழ்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க கனடா நாட்டின் எல்லைப்பகுதியில் நயாகரா நீர்வீழ்ச்சியின் பகுதியில் காருடன் 60 வயது பெண் ஒருவர் சிக்கிக்கொண்டார்.
கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் மாட்டிக் கொண்ட பெண்ணை காப்பாற்ற மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டரில் வந்துள்ளனர். இருப்பினும் அவரை காப்பாற்றுவதற்கு முன்பாகவே அந்த பெண் இறந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






