2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – டி.ஜி.பி க்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
காவல்துறையினரால் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் டிஜிபி உரிய நடவடிக்கைகளை எடுத்து உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு அதிரடிப்படையை அமைக்கவும், காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் தொடர்பான வழக்கை விரைந்து விசாரித்து அதன் முன்னேற்றம் குறித்து இரண்டு மாதங்களுக்குள் விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




