மீனவர்கள் விவகாரம் – முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கூட்டு பணிக்குழுவை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




