நாளை பள்ளி மாணவர்களுக்கு.. மகிழ்ச்சியான செய்தி..!
பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை சென்னை மயிலாப்பூரில் நாளை CM ஸ்டாலின் விரிவாக்கம் செய்து வைக்கிறார். இதில் பங்கேற்க பஞ்சாப் CM பகவந்த் மான் சற்றுமுன் சென்னைக்கு வந்துள்ளார்.
இந்த திட்டத்தில் 17.5 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதால் மேலும் 3.05 லட்சம் மாணவர்கள் பயனடைவர் என அரசு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





