பாகிஸ்தானுக்கு அஞ்சல் சேவைகள் நிறுத்தம்
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான உறவை படிப்படியாக துண்டித்து வருகிறது இந்தியா. இந்த வரிசையில், பாகிஸ்தானில் இருந்து வரும் அல்லது செல்லும் அஞ்சல், பார்சல் சேவைகளை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முன்னதாக, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும். பொருள்களுக்கு இந்தியா தடை விதித்திருந்தது. மேலும், பல தடைகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




