மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நல்லூரில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார். நிகழ்வில் மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.