பானைக்குள் சிக்கிய சிறுமியின் தலை..!
வயநாடு மாவட்டத்தில் பானைக்குள் தலையுடன் சிக்கிக்கொண்ட சிறுமியை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். பகுதியைச் சேர்ந்த சுக்கேசன் பவரின் ஒன்றரை வயது மகள் சுகந்திக்கா. வழக்கம்போல விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக பானையில் சிறுமி தலை சிக்கிக்கொண்டது. பெற்றோர்கள் சிறுமியை மீட்க போராடியும் முடியாததால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீண்ட நேரம் போராடி சிறுமியை பத்திரமாக மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





