தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு திருமுருகன்பூண்டி அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் நா. குமார் தனது சொந்த செலவில் 810 மாணவ மாணவிகளுக்கு லட்டுகள் வழங்கி வழங்கினார்.
முன்னதாக மாணவர்கள் அனைவரும் கைகளை உயர்த்து மலர் வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பூண்டி நகர செயலாளர் மூர்த்தி, துணை செயலாளர் தேஜாஸ் மூர்த்தி, மாவட்ட துணை அமைப்பாளர் லிங்கேஸ்வரன், மாவட்ட மகளிரணி செயலாளர் பரமேஸ்வரி, கவுன்சிலர் டாக்டர் ராஜன், செயலாளர்கள் கமலக்கண்ணன், சக்திவேல், சிவஞானம், லோகநாதன் உட்பட திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே கோவிலில் லட்சார்ச்னை! ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்!
மின்சாரம் தாக்கி டைல்ஸ் தொழிலாளி பலி.. போலீஸ் விசாரணை..!
வார விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!
ஸ்டாலின் சமரசம்.. நோட்டீஸை வாபஸ் பெற தயாநிதி முடிவு..!
செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை..!
ஜூலை 16ல் திருவண்ணாமலையில் அதிமுக ஆர்ப்பாட்டம்..!