ஹைதராபாத் விமானத்தில் விஷ பாம்புகள்..!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள விமான நிலையத்தில் பாம்புகளை கொண்டு வந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். தெலுங்கானாவில் ஷம்சாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வந்த விமானத்தில் இரண்டு பெண் பயணிகள் வித்தியாசமான பெரிய கூடை ஒன்றை வைத்திருந்தனர்.
இதனை கண்டு சுங்க அதிகாரிகள் அந்த கூடைகளை பறிமுதல் செய்து பரிசோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அதில் இரண்டு பாம்புகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து இரண்டு பெண்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





