குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடிய வட மாநில இளைஞர்.. பதறிப் போய் துரத்திய தந்தை..!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி செட்டியப்பனுர் பகுதியில் வசிக்கும் பால மூர்த்தி என்பவரின் மகள் வருணிகா ஸ்ரீ தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த வட மாநில இளைஞர் ஒருவன் அந்த குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு தந்தை மற்றும் பொதுமக்கள் வட மாநில இளைஞர் அணி துரத்தினர். இதனால் குழந்தையை முட்புதரில் தூக்கி வீசிவிட்டு வடமாநில இளைஞன் ஓட்டம் பிடித்தான். ஆனால் விடாமல் சென்று அதை இளைஞனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





