திடீரென கிரேன் வயர் அறுந்து விழுந்ததில் உடல் நசுங்கி இருவர் பலி..!
திருப்பதியில் மேம்பால கட்டுமான பணியின் பொழுது திடீரென கிரேன் விழுந்ததால் மேற்கு வங்கத்தை சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். திருப்பதியில் அறுபது கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
நேற்று நள்ளிரவில் பாலத்தின் ஒரு பகுதியை ராட்சதக் கிரேன் மூலம் தூக்கி இணைக்கும்போது கிரேன் ஒயர் அறுந்து பாலத்தின் ஒரு பகுதி அறுந்து விழுந்ததில் கீழே நின்றிருந்த இரண்டு தொழிலாளர்கள் மீது விழுந்ததில் இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





