திருவண்ணாமலை அருகே ஏரியில் சிக்கி தவித்த ஆட்டை மீட்க சென்ற இருவர் மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்தனர். வெங்கடா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் ஏரி அருகே ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றனர்.
அப்பொழுது ஆடு ஒன்று ஏரியில் சிக்கிக்கொண்டதால் அதனை காப்பாற்ற இருவரும் தண்ணீரில் இறங்கியுள்ளனர். இருவரும் எதிர்பாராத விதமாக மீன்பிடி வலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் இருவரின் உடல்களை உடற்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள் :
பேருந்தில் தவறாக நடத்த இளைஞரை சரமாரியாக அடித்து துவைத்த பெண்..!
ஜூன் 8ல் தமிழகம் வருகிறார் அமித்ஷா..!
பிரியாணியில் கிடந்த புழு.. அதிர்ந்து போன வாடிக்கையாளர்..!
உயிருக்கு போராடிய சிறுமி.. அசுர வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்..!
போராடும் மல்யுத்த வீரர்கள் அமித்ஷாவுடன் சந்திப்பு..!
கங்கை ஆற்றில் இரண்டாவது முறையாக இடிந்து விழுந்த பாலம்..!