நாளை சென்னையில் மதுபான கடைகள், பார்களை மூட உத்தரவு..!

சென்னையில் 5ம் தேதி மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் அவரது செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

 

அதில் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ் சென்னையில் உள்ள அனைத்து மதுபான கடைகளும், பார்களும் மூடப்பட வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது அப்படி மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.