திருச்சியில் பிறந்து 10 நாட்களை ஆன பெண் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் நீதிபதியின் உத்தரவின் பேரில் குழந்தையின் தாயை போலீசார் சிறையில் அடைத்தனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தம்பதிக்கு கடந்தாண்டு செப்டம்பர் 23ஆம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
பிறந்த குழந்தை பத்தாவது நாளிலேயே கடத்தப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த குழந்தையின் தாய் ஜானகியை போலீசார் கைது செய்தனர். விசாரணையை தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான தகவல்களை ஜானகி தெரிவித்ததால் போலீசார் குழப்பம் அடைந்தனர்.
மேலும் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்கறிஞர் பிரபுவின் இரண்டாவது மனைவி சண்முகவள்ளியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் குழந்தை கடத்தப்பட்டு நான்கு நாட்கள் ஆகியும் எந்த துப்பும் கிடைக்காததால் நீதிபதியின் உத்தரவின் பேரில் ஜானகியை போலீசார் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள் :
EVM முறைகேடுகளுக்கு மனித தலையீடுகள் தான் காரணமாக இருக்க முடியும்..!
விமான விபத்தில் மரணம்.. நடிகை சௌந்தர்யா 20-வது ஆண்டு நினைவு நாள்..!
18 முதல் 22-ம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும்..!
தேர்தலை கண்காணிக்க வாகனத்தில் ஜிபிஆர்எஸ் பொருத்த முடிவு..!
நெல்லையில் பயங்கரம்.. பெண்ணை கட்டிப்போட்டு வீடு புகுந்த மர்ம நபர்கள்..!
மன்சூர் அலிகானுக்கு உடல் நலக்குறைவு.. மேல் சிகிச்சைக்கு சென்னை வருகிறார்..!