ராபிடோ புக் செய்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை..!

பெங்களூருவில் நள்ளிரவில் தோழி வீட்டிற்கு செல்ல ராபிடோ புக் செய்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பெங்களூர் நகரில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் நள்ளிரவில் 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் தனது தோழி வீட்டிற்கு செல்வதற்காக ரேபிடோ வாகனத்தை புக் செய்தார்.

 

பின்னர் புக் செய்த வாகனத்திலேயே குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும் என கூறுகிறார். பின் மதுபோதையில் இருந்ததை அறிந்த ஓட்டுநர் அவர் புக் செய்த இடத்திற்கு அழைத்து செல்லாமல் தனது காதலியுடன் தங்கி இருக்கும் அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.

 

அங்கு காதலியின் உதவியோடு ஓட்டுனர் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் நடித்த புகாரின் பேரில் பிகார் மாநிலத்தை சேர்ந்த வாகன ஓட்டுனர், அவரது நண்பர் மற்றும் அவரது காதலி உட்பட மூவரும் கைது செய்யப்பட்டனர்.