எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயார் எனக்கூறிய பிரதமர்..!
எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் விரிவாக விவாதம் நடத்த தயாராக இருப்பதாக கூறினார்.
அமைதியான முறையில் விவாதங்கள் நடைபெற வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் முக்கியமான இந்த கூட்டத்தொடரில் ஆக்கபூர்வமான விவாதத்தை மக்கள் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார். உருமாறிய கொரொனா விவகாரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.






