கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்காக தொடர்புடைய ரவுடியை நண்டு குழம்பு சாப்பிட அழைத்து கொலைக்கு உதவிய காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். ஆதம்பாக்கத்தை சேர்ந்த ரவுடி 200க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் ரவுடியாக வலம் வந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸில் இணைந்தார். இளைஞர் அணியில் மாவட்ட நிர்வாகியாக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி ஆதம்பாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் ரவுடியை வெட்டி படுகொலை செய்தது தொடர்பாக தனிப்படை அமைத்து கொலை குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.
ரவுடியின் காதலியான லோகேஸ்வரி வீட்டில் கொலை நடந்ததா என விசாரணை தொடர்ந்ததில் ரவுடிக்கும் ராகுல் என்பவருக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி இருந்து வந்ததாகவும் அதனால் ஏற்பட்ட வெறுப்பில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
நண்டு குழம்பு சாப்பிட அழைத்ததாகவும் அப்போது வந்தவரை 8 பேர் வெட்டிக் கொலை செய்ததாகவும் லோகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
5 சவரன் நகைக்காக சொந்த அத்தையை கழுத்து அறுத்து கொலை செய்த நபர்..!
பம்பரம் இல்லை...தனியாக சுற்றும் மதிமுக!
மயிலாடுதுறையில் மல்லுக்கட்டு ...கோதாவில் இல்லாத சுதா வந்த பின்னணி!
நாம் தமிழர் வேட்பாளருக்கு தமிழே தகராறு..!
பிரபல நடிகருக்கு முத்தம் கொடுக்க திரிஷா செய்த விஷயம்..!
ஓபிஎஸ் மேல அவ்ளோ பயமா? டஃப் கொடுக்கும் 5 ஓபிஎஸ்கள்..!