மதுரையில் 21 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று..!
மதுரையில் கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தொற்று அதிகரித்து வந்த நிலையில் குணமடைந்து சிலருக்கு கண்களில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.
மதுரையில் இதுவரை 397 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது 21 பேருக்கு மட்டுமே கருப்பு பூஞ்சைக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் தகவலை வெளியிட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை நோய் தற்போது கட்டுக்குள் கொண்டுவர பட்டுள்ளதாகவும் அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.






