மகாராஷ்டிராவில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பால் 50 பேர் உயிரிழப்பு..!
மகாராஷ்டிராவில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மூன்றாம் அலை தவிர்க்க முடியாததா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று இரத்தினபுரி மாவட்டத்தில் இரண்டு நோயாளிகள், மற்றும் மும்பையில் தலா ஒருவரும் டெல்டா பிளஸ் வைரசால் உயிரிழந்துவிட்டதாக மாநில அளவில் 2 தடுப்பூசி போட்டுக் கொண்ட 63 வயது பெண்மணி கடந்த மாதம் கொரோனாவால் உயிரிழந்தார்.
அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதனிடையே மகாராஷ்டிராவில் இதுவரை 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 10 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்பதால் தடுப்பூசி பாதுகாப்பையும் மீறி பரவுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.






