மீரா மிதுன் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன்..!
பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்களை இழிவுபடுத்தி பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நடிகை மீரா மிதுன் விசாரணைக்கு நேரில் ஆஜராக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மாடல் அழகியும் நடிகையுமான வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் பட்டியல் இன சமூக மக்களை இழிவுபடுத்தி பேசியதாக எதிர்ப்புகள் எழுந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் காவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான விசாரணைக்கு நாளை காலை 10 மணி அளவில் நேரில் வந்து ஆஜராக வேண்டும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் சம்மன் அனுப்பியிருக்கின்றனர்.






