மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை..!
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட சில மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வரும் வெள்ளிக்கிழமை காணொளி வாயிலாக ஆலோசிக்க உள்ளார்.
கொரொனா தடுப்பூசி, தொற்று தடுப்பு நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் ஆலோசிக்க உள்ளார். இந்த சந்திப்பில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநில முதலமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர்.
தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவது குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருக்கும் நிலையில் வெள்ளிக்கிழமை முகஸ்டாலின் பிரதமரிடம் உரையாற்றும் வாய்ப்பு உள்ளது.






