வேலைக்கு சேர்ந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர்..!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே வேலைக்கு சேர்ந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த பேக்கரி உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கேரளாவை சேர்ந்த மொய்தீன் குட்டி உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து பேக்கரி நடத்தி வந்துள்ளனர்.

 

அந்த பேக்கரியில் திருச்சியை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணும் அவரது கணவரும் வேலைக்கு சேர்ந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக பேக்கரி மூடப்பட்டதால் பெண்ணின் கணவர் வேறு வேலைக்கு சென்று வருகிறார்.

 

இந்த நிலையில் பேக்கரி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பேக்கரி உரிமையாளர்கள் மூன்று பேரும் கூட்டு பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.

 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் இருவரை மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவான மொய்தீன் குட்டியை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.

 


Leave a Reply