150 மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்படலாமா..?
நாடு தழுவிய கொரொனா ஊரடங்கை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தேசிய ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்தால் பொருளாதார பாதிப்பு மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் ஏழ்மைக்கு காரணமாகி விடும் என மத்திய அரசு கருதுகிறது.
கொரொனா 15 வீதத்திற்கும் அதிகமாக உள்ள சுமார் 150 மாவட்டங்களில் கடுமையான ஊரடங்கை கொண்டுவரலாம் என சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சுகாதார அமைச்சகம் ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியுள்ளது என்றாலும் கும்பமேளா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க திரும்பியவர்கள் சூப்பர் ஸ்ப்ரேட்டர்களாக மாறி இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வைரஸை பரப்ப கூடும் என்ற அச்சமும் உருவாகியுள்ளது.






