எஞ்சாயி எஞ்சாமி பாடலுக்கு நடனமாடிய காவல்துறை..!
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் முக கவசம் அணிவது இடைவெளியை கடைபிடிப்பது போன்ற தற்காப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த காவல்துறையினர் சினிமா பாணியில் நடனம் ஆடுகின்றனர்.
சீருடையணிந்த காவல்துறையினருடன் போலீஸ் வேடத்தில் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் சிலரும் முக கவசம் அணிந்து என்ஜாய் என்ஜாய் தமிழ் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பல லட்சம் பேர் பார்த்து மகிழ்கின்றனர். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு இந்த வீடியோ மூலம் கேரள போலீசார் பிரச்சாரம் செய்துள்ளனர்.






