ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு..!
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% பணியாளர்களை வீடுகளில் இருந்து பணியாற்றிய அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தியுள்ளதாக செய்திக்குறிப்பு ஒன்றில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை அதிகரிப்பது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ள தமிழக அரசு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முன்வரும் தொழிற்சாலைக்கு தற்காலிகமாக அனுமதி அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் கொரொனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.






