கன்னியாகுமரியில் கொரொனாவுக்கு 4 பேர் பலி..!
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரொனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற வந்த 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 347 ஆக உயர்ந்துள்ளது.
புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அந்தவகையில் இன்று நாகர்கோவிலில் ஒரே தெருவில் ஏழு பேருக்கும் கொரொனா தொற்று உறுதியானது. இந்த பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர்.






