--- --:--:-- --

வேண்டுதலை நிறைவேற்ற நாகூர் தர்காவில் வழிபட்ட சசிகலா..!

5

வேண்டுதலை நிறைவேற்றவும், தமிழக மக்கள் நலமுடன் வாழவும் நாகூர் தர்காவில் வழிபட்ட சசிகலா ராகு சன்னிதியில் நாக தோஷத்தில் நீங்க ஹோமம் வளர்த்து பூஜை செய்தார்.

 

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா ஜனவரி மாதம் தண்டனை காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியே வந்ததும் அரசியலில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சசிகலா அரசியலில் இருந்து தான் முழுவதும் விலகுவதாக கூறி அதிர்ச்சி அளித்தார்.

 

தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளில் தலையிடாமல் அமைதி காத்து வந்தார். இந்த நிலையில் அவ்வப்போது வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் சசிகலா சில சிறப்பு பூஜைகளையும் வேண்டுதல்களையும் நிறைவேற்றி வருகிறார். நாகை மாவட்டத்திற்கு சென்று சசிகலா நாகூர் தர்கா, ராகு சன்னதியில் வழிபாடு நடத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon