ஊரடங்கு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.!
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும். ஊரடங்கு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறையிலுள்ள தளர்வுகள் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடரும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொது இடங்களுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் எனவும் பொது இடங்களில் தனி நபர் இடைவெளியை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






