--- --:--:-- --

சித்ரா அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தாய் குற்றச்சாட்டு..!

11

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை என காவல்துறை கூறியுள்ளது. ஆனால் தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். தனது மகளை கொலை செய்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

சின்னத்திரை நடிகையான சித்ரா நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவலையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்து அவரது இறப்பு தற்கொலை என முடிவு செய்யப்பட்டது.

 

இருப்பினும் சித்ராவின் சித்ராவின் இறப்பில் பல மர்மங்கள் நிறைந்து இருப்பதாக தெரிவித்து வருகின்றனர் அவருடைய சக நடிகர்கள். சித்ராசித்ராவின் இறப்பு குறித்து சக நடிகர்கள் மற்றும் அவருடைய கணவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சித்ராவின் தாயார் தன் மகள் அடித்துக் கொல்லப் பட்டுள்ளார் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon